19/1/09

பாரதி vs. சி.பி.எம். vs. அதிமுக

சமீபத்தில் சென்னை புறநகர் பகுதியில் நடந்த ஒரு அதிமுக பொதுக்கூட்டத்தை தேநீர்க்கடையில் இருந்தபடியே கேட்டுக்கொண்டிருந்தேன்.

புரட்சித்தலைவியின் புகழ் பாடிய சிறப்பு பேச்சாளர் அதன்பிறகு கூட்டத்திற்கு விறுவிறுப்பு ஏற்ற கருணாநிதியைச் சாட ஆரம்பித்தார். கூட்டம் களை கட்டியது.

பாரதியின் பெயரால் அமைந்த விருதை மு.க விற்கு தந்தது தவறாம். அதற்கு அவர் சொன்ன விளக்கம் பாரதியின் அன்பர்கள் இதுவரை காணாத பொழிப்புரை.

கருணாநிதி பாரதியின் வார்த்தைகளை மீறியவராம். அதாவது ''மேலைக்கடல் முழுதும் கப்பல் விடுவோம், ... சேதுவை மேடுறுத்தி வீதி சமைப்போம்'' என்ற பாரதி நம்மை அரபிக்கடலில்தான் கப்பல் விடச் சொன்னார். ஆனால் கருணாநிதி வங்கக்கடலில் கப்பல் விடுகிறார். அதுவும் பாரதி 'சிங்களத் தீவினுக்கோர் பாலம் அமைப்போம்' எனப் பாலம் போடச் சொன்னால் சேது கால்வாய் வெட்ட முனைகிறார் கலைஞர். எனவேதான் பாரதிக்கு எதிராகச் செயல்படும் கலைஞர் அவ்விருதுக்கு தகுதி படைத்தவர் அல்ல். என்றார் அந்த மாநிலப் பேச்சாளர்.

பாரதி அன்பர்களே உங்களுக்கு ஒரு சவால் ... இச்சவால் என்னிடமிருந்து வரவில்லை. உங்களது புதிய பங்காளி புரட்சித்தலைவியின் அணியிலிருந்து வருகிறது. ஒன்று பாரதியைக் காப்பாற்றுங்கள்.... முடியவில்லையா வேட்டியை காப்பாற்றிக் கொள்ளுங்கள்...

லேபிள்கள்: , , , , ,

1 கருத்துகள்:

23 பிப்ரவரி, 2009 அன்று 11:48 AM க்கு, Anonymous பெயரில்லா கூறியது…

maanamulla CPM kaaran pathil solla oru test

 

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு